பெற்றவர்/குடும்பம் மற்றும் சமூகம் காட்டும் ஈடுபாடு
எமது பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் வெற்றியை உறுதி செய்யும் முயற்சியில் பெற்றோரும் சமூகத்தின் அங்கத்தவர்களும் மிகவும் முக்கியமான ஒரு பங்கினை வகிக்கின்றனர். பாடசாலைகள், குடும்பங்கள் மற்றும் சமூகம் ஆகியன ஒன்றாகச் சேர்ந்து செயற்பட்டு பிள்ளைகள் கல்வி கற்பதை ஆதரிக்கும் பொழுது பாடசாலையில் மாணவர்கள் மேலாகச் சாதிக்கிறார்கள், நீண்டகாலம் பாடசாலையில் தங்கி நிற்கிறார்கள் மற்றும் பாடசாலையைக் கூடுதலாக விரும்புகிறார்கள் என்று ஆராய்ச்சி மூலம் அறியப்பட்டு உள்ளது.
உங்கள் பாடசாலைச் சமூகத்துக்கான சேவையில் நீங்கள் ஈடுபட்டு உங்கள் பங்கினை அளிப்பதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. உங்கள் உள்ளூர் பாடசாலையில் தொண்டர்களாக உதவுவது தொடக்கம் பாடசாலையின் துணை மன்றங்கள் அல்லது கல்விச்சபையின் ஆலோசனைக் குழுக்களில் அங்கத்தவர்களாக பங்குபற்றுவது வரை பல வழிகளில் இதனைச் செய்யலாம். இவ்வாறான வழிகளால் நீங்கள் படசாலைச் சமூகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடிவதுடன் உங்கள் கருத்துக்களையும் வெளிப்படுத்த முடிகிறது.
இவ்வாறான சேவையில் நீங்கள் ஈடுபடுவது எவ்வாறு என்று மேலும் அறிந்து கொள்வதற்கு உங்களது உள்ளூர் பாடசாலையுடன் அல்லது பெற்றோர் மற்றும் சமூக ஈடுபாட்டுக் காரியாலயத்துடன் (Parent and Community Engagement Office) தொடர்பு கொள்ளுங்கள்.