ஆட்சிமுறை/ நம்பிக்கைப் பொறுப்பாளர்கள்
ரொறொன்ரோ மாவட்ட பாடசாலைச் சபை (TDSB) அமைப்பின் கீழ் ரொறொன்ரோ மாநகரம் அடங்கிலுமாக இருபத்தியிரண்டு நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் (trustees) தேர்தல் முறையில் தெரிவு செய்யப்படுகிறார்கள். இவர்கள் பிள்ளைகளின் கல்விமுறையிலான சாதனை மற்றும் பொதுநலன் ஆகியவற்றுக்காக முன்நின்று உழைப்பவர்களாக இருக்கிறார்கள். நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் ரொறொன்ரோவின் உள்ளூர் மக்கட் சமூகங்களுக்கும் TDSB பாடசாலைச் சபைக்குரிய பாடசாலைகளுக்கும் இடையே முக்கியமான ஓர் இணைப்பினை ஏற்படுத்தி, பெற்றோர்/பாதுகாவலர்கள் ஆகியோருடனும் சமூகத்துடனும் சேர்ந்து செயற்பட்டு, பிள்ளைகளின் கல்வி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் கரிசனங்களை பாடசாலைச் சபையிடம் எடுத்து வந்து அவற்றுக்கான கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டுத் தீர்மானங்கள் எடுக்கப்படச் செய்கின்றனர்.
TDSB பாடசாலைச் சபையின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களின் பங்களிப்பில் பின்வருவனவும் அடங்கும்:
- TDSB பாடசாலைச் சபையின் வரவுசெலவுத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்குதல்;
- மாணவர்கள் யாவரினதும் கல்விச் சமத்துவத்தினை முன்னெடுப்பதற்கான கொள்கைகள் மற்றும்நடைமுறைகளைத் தீர்மானித்தல்;
- மாணவர்களின் கல்வி முறையிலானசாதனை உயர்ந்தநியம அளவுகளில் இருப்பதனை உறுதி செய்தல்;
- மாகாண அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்பட்டு,பாடசாலைச் சபையானது அதன் சட்டரீதியான மற்றும் நிதிமுறையிலான கடப்பாடுகளை நிறைவேற்றுவதை உறுதி செய்தல்.
உங்களுடைய உள்ளூர் நம்பிக்கைப் பொறுப்பாளர் பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்வதற்கு அவர்களின் இணையத் தளத்துக்குச் சென்று பார்க்கலாம், அல்லது 416-395-8787 என்ற தொலைபேசி இலக்கத்தில் அவர்களை அழைக்கவும் முடியும்.