ஆரம்ப நிலைப் பாடசாலை
ஆரம்ப நிலைப் பாடசாலையில் உங்கள் பிள்ளை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு ஆகியவற்றைப் பெற்றுக் கொள்கிறார். பாடசாலையில் கல்வி கற்கும் முழுக்காலத்திலும் அதன் பின்னரும் வாழ்வில் வெற்றி காண்பதற்கு இவ்விரு அறிவுகளும் தேவைப்படுகின்றன. ஆரம்பநிலைப் பாடசாலை வருடங்களில் முக்கிய பாடப் பிரிவுகளில் தமது திறமைக்கான அத்திவாரத்தை மாணவர்கள் இடுவதனால், அவர்கள் பின்பு தமது உள்ளார்ந்த முழு ஆற்றலையும் வெளிக் கொண்டு வருவதற்கும் ஆர்வமுள்ள துறைகளில் படித்துக் கொள்வதற்கும் முடிகிறது.
வகுப்பறையில் நடைபெறும் கற்கும் செயல் ஒரு பிள்ளையின் வாழ்வில் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அதேசமயத்தில், வகுப்பறைக்கு வெளியே அவருக்குக் கிடைக்கும் புதிய அனுபவங்களின் காரணத்தால் ஆரம்பநிலைப் பாடசாலை வருடங்கள் அவருக்கு உண்மையில் மனக் கிளர்ச்சியூட்டும் ஒரு காலமாக அமைந்து விடுகின்றன. பாடசாலை நேரத்துக்குப் பின் நிகழும் திட்டங்களில் பங்குபற்றுவது அல்லது விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுவது என்று எதுவாக இருந்தாலும், பிள்ளைகள் தம் பாடசாலை வாழ்வில் ஈடுபாடு காட்டுவதற்கு எண்ணிலடங்கா வழிகள் அவர்களுக்கு அங்கு உள்ளன. அங்கு கிடைக்கும் அனுபவத்தால் அவர்கள் பயன் பெறுவதற்கும் முடிகிறது.
பிள்ளைகள் ஆரம்பநிலைப் பாடசாலையில் கழிக்கும் வருடங்களில் அவர்களின் பெற்றோரும் அவர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றனர். உங்கள் பிள்ளை தன் வாழ்வில் வெற்றிபெறுவதனை நீங்கள் உறுதி செய்து கொள்வதற்கு உங்களுக்குத் தேவைப்படும் எல்லாத் தகவல்களும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று நாம் நிச்சயப்படுத்த விரும்புகிறோம். உங்களுக்கு உங்களிடம் இருக்கக் கூடிய எக்கேள்விகளுக்கும் பதில் அளிப்பதற்கு உங்கள் உள்ளூர் பாடசாலையில் உள்ள பணியாளர்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறார்கள். இதில் எவ்வாறு நீங்களும் பங்குபற்றுவது என்று அறிய விருப்பமா? இவ்விடயத்தில் உங்களை வழிநடத்திச் செல்வதற்காக நாம் தொடர்ச்சியான பல தகவல் மூலவள வெளியீடுகளை தயாரித்து வைத்திருக்கிறோம்.